
புதுடெல்லி: இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல தரவு சார்ந்து கொள்கை வகுப்பதைத் தொடர வேண்டும் என்று 16-வது நிதிக்குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: முடிவெடுத்தலுக்குத் தரவுகளைப் பயன்படுத்துதல் என்ற கருப்பொருளுடன் 18-வது புள்ளியியல் தினம் இன்று கொண்டாடப்பட்டது. புள்ளியியல் மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் துறைகளில் சிறந்து விளங்கிய மறைந்த பேராசிரியர் பிரசாந்தா சந்திர மகலனோபிஸ்-சை நினைவுகூரும் வகையிலும் இத்துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையிலும் மத்திய அரசு அவரது பிறந்த நாளான ஜூன் 29ம் தேதியை தேசிய புள்ளியியல் தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment