
சென்னை: இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களாக உள்ள ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி உள்ளன. உயர்த்தப்பட்ட இந்த புதிய கட்டண முறை வரும் ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மக்களவை தேர்தல் முடிந்த கையோடு இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அதன் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் என்ற செய்தி தேர்தலுக்கு முன்னதாகவே சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் நேற்று (வியாழக்கிழமை) ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஏர்டெல் நிறுவனமும் கட்டண உயர்வு குறித்து அறிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment