
மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் நேற்று 77 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 308.37 புள்ளிகள் (0.40%) உயர்ந்து புதிய உச்சமாக 77,301.14 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 374 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத வகையில் 77,366.77 வரை சென்றது.
அதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 92.30 புள்ளிகள் (0.39%) உயர்ந்து முதன்முறையாக 23,557.90 புள்ளிகளை எட்டியது. வர்த்தகத்தின் இடையே நிஃப்டி 113.45 புள்ளிகள் அதிகரித்து 23,579.05 வரை சென்று புதிய உச்சத்தை பதிவு செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment