
சென்னை: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட விவொர்க் நிறுவனம், பல்வேறு நாடுகளில் பணியிடங்களுக்கான வசதியை வழங்கி வருகிறது. தனிநபர்கள் முதல் சிறிய, பெரிய நிறுவனங்கள் வரையில், தங்கள் அலுவலமாக விவொர்க் கட்டிடங்களைப் பயன் படுத்திக் கொள்ள முடியும்.
இந்தியாவில் 2017-ம் ஆண்டு விவொர்க் நிறுவனம் களம் இறங்கியது. பெங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத் என 8 நகரங்களில் விவொர்க் இந்தியா செயல்பட்டு வந்தது. தற்போது அதன் 55-வது கட்டிடத்தை சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஒலிம்பியா சைபர்ஸ்பேஸில் திறந்துள்ளது. இது சென்னையில் அதன் முதல் பணியிடக் கட்டிடமாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment