
நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு 20 கன்டெய்னர்கள் மூலம் 1 கோடி முட்டைகள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.
நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5.50 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment