
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் மூன்றாம் வார இறுதி நாள் வர்த்தகம் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 874 புள்ளிகள் (1.45 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,330 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 287 புள்ளிகள் (1.61 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,604 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை வீழ்ச்சியுடனேயே தொடங்கின. காலை 09:57 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 585.31புள்ளிகள் சரிந்து 59,619.75 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 129.85 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,762.10 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment