
புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் ஜனவரி 18 வரையிலான கணக்கீட்டின்படி பயணிகள் மற்றும் சரக்குப் போக்கு வரத்தின் மூலமாக ரயில்வே ரூ.1.9 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரயில்வே ஈட்டிய வருவாய் ரூ.1.3 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. ஆக, நடப்பு நிதியாண்டில் ரயில்வேயின் வருவாய் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரயில்வே மூலமான சரக்கு போக்குவரத்துக்கு அதிக தேவை எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் 2,000 சரக்கு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment