
மும்பை: ’‘ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல். இந்திய அமைப்புகள், அதன் வளர்ச்சிகள் மீதான தாக்குதல்’ என்று அதானி குழுமம் கூறியுள்ளதற்கு, பதிலடி கொடுத்துள்ள சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம், "செய்த தவறுகளை தேசியவாதத்தின் பெயரில் குழப்பம் முடியாது. நாங்கள் எழுப்பிய ஒவ்வொரு குற்றச்சாட்டையும் இதுபோன்ற விளக்கங்களால் தவிர்க்க முடியாது” என்று கூறியுள்ளது.
மேலும், “அதானி குழுக அறிக்கையை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். இந்தியா ஒரு வளமான ஜனநாயக நாடு. சூப்பர் பவராக உருவெடுக்கும் நாடு. அதற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை அதானி குழுமம் பின்னோக்கி இழுக்கிறது என நம்புகிறோம். இந்திய தேசியக் கொடியை போர்த்திக்கொண்டு தேசத்தை அந்நிறுவனம் சூறையாடிக் கொண்டிருக்கிறது. மோசடி என்பது மோசடிதான். அதை உலகின் பெரும் பணக்காரர்கள் செய்தாலும், அது மோசடி தான்" என்று ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment