
சென்னை: தங்கத்தில் அதிக முதலீடு செய்யப்படுவதால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறுநாடுகள் தற்போது பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால், பெரும் முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகளை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர். இதன்காரணமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment