
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்வுடன் 60,708 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18,076 க்கும் குறைவாக இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்திருந்த பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி புதன்கிழமை வர்த்தகத்தைத் தொடங்கின. காலை 09.41மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 88.48 புள்ளிகள் உயர்வடைந்து 60,744.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி14.25 புள்ளிகள் உயர்ந்து 18,067.55 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment