
தாகா: உக்ரைன் - ரஷ்யா போரால் கடந்த மே மாதம் முதல் இதுவரை டாலருக்கு நிகரான வங்கதேச கரன்சி மதிப்பு 25 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மின்சாரம் வாங்க பணம் செலுத்த முடியாததால் தினமும் 13 மணி நேர மின் வெட்டு நிலவுகிறது.
பணவீக்கம் 8.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலை யில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிதியுதவி வழங்குமாறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. அதை ஏற்று வங்கதேசத்துக்கு ரூ.38 ஆயிரம் கோடி கடன் வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) ஒப்புக் கொண்டுள்ளது. .
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment