
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 60,817 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 78 புள்ளிகள் உயர்வடைந்து 18,105 ஆக இருந்தது.
கடந்த வார இறுதியில் சரிவுடன் நிறைவு செய்திருந்த பங்குச்சந்தைகள் மூன்றாவது வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:27மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 229.46 புள்ளிகள் உயர்ந்து 60,851.23 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 90.80 புள்ளிகள் உயர்வடைந்து 18,118.45 ஆக இருந்தது
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment