
மும்பை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக் கொள்கை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வட்டி விகிதத்தை உயர்த்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் 6 பேரில் 4 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, பெரும்பான்மையின் அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஏதுவாக, ரெப்போ வட்டி விகித்தை மேலும் 0.25 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, ரிசர்வ் வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment