
சென்னை: தங்கம் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வந்தது. குறிப்பாக, கடந்த 2-ம் தேதி ஒருபவுன் ரூ.44,040-க்கு புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது.
பின்னர், 3 நாளாக தங்கம் விலைகுறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் தங்கம் பவுன் ஒன்றுக்கு ரூ.42,680-க்கு விற்பனையானது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கிஉள்ளது. நேற்று 3-வது நாளாக தங்கம் விலை அதிகரித்தது. சென்னையில் நேற்றுமுன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.5,373 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment