
உலக பொருளாதார மன்றம் அண்மையில் ‘Future of Jobs Report 2023’ என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அடுத்த 5 ஆண்டுகளில் (வரும் 2027-க்குள்) சுமார் 23 சதவீத பணிகள் மாற்றம் காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 11 மில்லியனுக்கும் மேலான ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் சுமார் 800 நிறுவனங்கள் கொடுத்த உள்ளீட்டின் அடிப்படையில் சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
கல்வி, விவசாயம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் போன்ற துறைகளில் பெரிய அளவில் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஏஐ, மெஷின் லேர்னிங் வல்லுநர்கள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்பு பெருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment