
நாகப்பட்டினம்: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு அக்.14-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், புயல், மழை காரணமாக அக்.20-ல் கப்பல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மே 13-ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து மீண்டும் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. ஏற்கெனவே ‘செரியாபாணி’ என்ற கப்பல் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 'சிவகங்கை' என்ற கப்பல் இயக்கப்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment