
மும்பை: இந்தியாவில் தங்கத்தின் தேவை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கியில் தங்க கொள்முதல் நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில் 19 டன்களுக்கு மேல் கடந்துள்ளதாக தகவல்.
இது குறித்த அறிக்கையில் உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள விவரங்கள் குறித்து பார்ப்போம். இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அண்மையில் எட்டியது. இருந்தும் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு காலமான ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் தங்கத்தின் தேவை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment