
மும்பை: வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
வங்கி மோசடி, பண மோசடி வழக்கில் யெஸ் வங்கியின் இணை நிறுவனரான ராணா கபூர் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். யெஸ் வங்கியில் மேற்கொள்ளப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பாக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment