
சேலம்: தேர்தல் நடைமுறைகளால், சேலம் லீ பஜாருக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததுடன், புளி வரத்து 4-ல் ஒரு பங்கு அளவுக்கு குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புளி அறுவடை சீசன் நீடிக்கும் நிலையில், புளி வரத்தும், விற்பனையும் குறைந்துவிட்டதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
கோடை காலம் என்பதால், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் புளி அறுவடை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் புளி மொத்த விற்பனையில் முக்கிய விற்பனை மையமாக இருக்கும் சேலம் லீ பஜாரில் உள்ள ஏல மண்டிகளுக்கு, பல்வேறு இடங்களில் இருந்து, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் புளி மூட்டைகள் விற்பனைக்கு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment