
ஓசூர்: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பின்றி, வருவாய் இழந்து வருவதாக தொழில் முறை ஓவியர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், இத்தொழிலை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓவியக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த காலங்களில் அரசியல் கட்சித் தலைவர் பிறந்த நாள், அரசு சார்ந்த நிகழ்வுகள், இயற்கை ஓவியங்கள் உள்ளிட்ட பணிகளில் தொழில் முறை ஓவியர்கள் மிகுந்த பரபரப்புடன் செயல்பட்டு வந்தனர். குறிப்பாகத் தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சி சின்னங்கள் வரையத் தொழில் முறை ஓவியர்களைத் தேர்தல் அறிவிப்பு முன்னரே அரசியல் கட்சியினர் முன்பணம் கொடுத்துத் தேர்தல் பணியில் பிரதானப்படுத்தி வந்தனர். இதே போல, திரைப்படத்துறையிலும் தொழில்முறை ஓவியர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment