
சென்னை: அரசு, தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் வருமான வரிக்கான டிடிஎஸ் தொகையை அதன் நிர்வாகங்கள் பிடித்தம் செய்வது வழக்கமாகும். இந்த தொகையை சம்பளம் வழங்கும் பொறுப்பு அலுவலர் வருமானவரித் துறைக்கு செலுத்தினால் மட்டுமே அத்தொகை சம்பந்தப்பட்ட நபரின் வருமானவரிக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடம் மாதந்தோறும் டிடிஎஸ் பிடித்தம் செய்யும்தொகையை அரசின் கணக்கில் செலுத்திவிட்டு, வருமானவரித் துறைக்கு ரிட்டர்ன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment