
மும்பை: உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத பங்குடன் இந்தியா இன்று சர்வதேச வளர்ச்சியின் இயந்திரமாக மாறி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், "இந்திய ரிசர்வ் வங்கி இன்று 90 ஆண்டுகளை நிறைவு செய்து வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. ரிசர்வ் வங்கி சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பல சகாப்தங்களைக் கண்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment