
ஓசூர்: செயற்கை முறையில் பழுக்க வைத்து மாம்பழம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்திலேயே அதிகளவில் மா விளையும் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம். இப்பகுதியில் விளையும் மாம்பழங்கள் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற் பனைக்கு அனுப்புகின்றனர். அதே போல் மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு போதிய மழையின்மை காரணமாக மா விளைச்சல் பாதிக்கப்பட்டு மாம்பழம் சீசன் தாமதமாக தொடங்கி உள்ளது. தற்போது செந்தூரா, மல்கோவா போன்ற மாம்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment