
சென்னை: கரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட சென்னை - மொரிசியஸ் விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.
கரோனா பெருந்தொற்றால் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால், சென்னை - மொரிசியஸ் - சென்னை இடையே செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்பட்டு வந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment