
கோவை: தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான ஜவுளித்தொழில் பல்வேறு காரணங்களால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், பருத்தி சாகுபடியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பருத்தியை முக்கிய மூலப் பொருளாக கொண்டு செயல்படும் ஜவுளித் தொழில் தமிழகத்தில் பிரதானமாக உள்ளது. இந்தாண்டு மொத்தம் 320 லட்சம் பேல் ( ஒரு பேல் 170 கிலோ ) பருத்தி சாகுபடி செய்யப்படும் சூழலில் தற்போது வரை 258 லட்சம் பேல் சந்தைக்கு வந்துள்ளது. பருத்தி விலையும் குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் நெருக்கடியில் இருந்து தமிழக ஜவுளித் தொழில் மீளவில்லை என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment