
சென்னை: சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து,ஒரு பவுன் ரூ.53,800 என்னும்புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இவ்வாறு விலை அதிகரித்திருப்பது நகை வாங்குவோரை கவலை யடையச் செய்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச. 4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் யாரும் எதிர்பாராத வகையில் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அதன்படி, மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment