
சென்னை: தெற்கு ரயில்வேயில் கடந்த நிதிஆண்டில் (2023-24) அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, ரூ.1,215.79 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இரண்டாவது இடத்தை எழும்பூர் ரயில் நிலையம் (ரூ.564.17) பிடித்துள்ளது.
இந்திய ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டும் மண்டலங்களில் ஒன்றாக தெற்கு ரயில்வே இருக்கிறது. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இந்த கோட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்கள் வழியாக ஓடும் ரயில்கள், நிலையத்துக்கு வந்து செல்லும்பயணிகள் மூலமாக ரயில்வேக்கு வருவாய் கிடைக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment