
ஈரோடு: வணிகர் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் ஈரோட்டில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது: எங்களது அமைப்பின் 41-வது மாநில மாநாடு மே 5-ம் தேதி மதுரையில் நடக்கிறது. வணிகர்களைப் பாதிக்கும் பெரு நிறுவனங்களுக்கு எதிராக ஒரு முக்கிய தீர்மானத்தை இந்த மாநாட்டில் நிறைவேற்ற உள்ளோம். பெரு நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ஆனால், அவர்கள் நேர்மையாக வணிகம் செய்வது இல்லை. தரம் குறைவான பொருட்களை, விலை குறைத்து அவர்கள் விற்பனை செய்வதை நாங்கள் எதிர்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment