
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2023-2024-ம் நிதியாண்டில் ரூ.1,072கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 31.03.2024 அன்று நிறைவடைந்த நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2023-2024-ம் நிதியாண்டில் தனது மொத்த வணிகத்தில் 4.85சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.89,485 கோடியை எட்டியுள்ளது. வங்கியின் வைப்புத் தொகை 3.66 சதவீதம் அதிகரித்து ரூ.49,515 கோடியாகவும், கடன் தொகை 6.35 சதவீதம் அதிகரித்து ரூ.39,970கோடியாகவும் அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment