
புதுடெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளபோதிலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சில்லறை விற்பனை விலையை குறைக்காமல் முந்தைய நிலையிலேயே தொடர்கின்றன. அந்த வகையில் தற்போது அந்நிறுவனங்கள் 1 லிட்டர் பெட்ரோலை ரூ.10 லாபத்திலும் டீசலை ரூ.6.5 நஷ்டத்திலும் விற்பனை செய்து வருகின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் பீப்பாய் கச்சா எண்ணெய் 102.97 டாலராக இருந்தது. அது ஜூன் மாதத்தில் 116 டாலராக உயர்ந்தது. எனினும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் சில்லறை விற்பனை விலையை உயர்த்தவில்லை. இதன் காரணமாக அந்நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.17, டீசலுக்கு ரூ.27.7 என்ற அளவில் நஷ்டத்தைச் சந்தித்தன. இதனால், அந்நிறுவனங்களின் வருவாய் கடுமையாகக் குறைந்தது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ரூ.21,201 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment