
புதுடெல்லி: கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு தளத்தில் வணிகப் போட்டிவிதிக்கு புறம்பாக செயல்படுவதாகக் கூறி கடந்த அக்டோபர் மாதம் இந்திய வணிகப் போட்டி ஆணையம் ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்துகூகுள் நிறுவனம் தேசிய சட்டநிறுவன தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. அபராதத்துக்கு தடைவிதிக்கும்படி, மேல்முறையீட்டில் கூகுள் தெரிவித்திருந்தது.
இந்நிலையில். அம்மனுவை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அபராதத்துக்கு தற்போது உடனடியாக தடைவிதிக்க முடியாது என்றும் இந்திய வணிகப் போட்டி ஆணையத்தின் தரப்பை விசாரித்தப் பிறகு அபராதத்துக்கு தடை விதிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தற்சமயம் அபராதத் தொகையில் 10 சதவீதத்தை செலுத்தும்படி கூகுள் நிறுவனத்துக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment