
புதுடெல்லி: 50 வருடங்கள் பழமையான வாகனங்களைப் பதிவு செய்யும் திட்டம், ஒடிசாவில் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் மாநிலமாக பதிவைத் தொடரும் ஒடிசாவில் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் சுற்றுச்சூழலைக் காக்க மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் பழமையான வாகனங்களை அழிக்கும் திட்டத்தை வகுத்துள்ளது. அதேசமயம், பழமையான வாகனங்களை பராமரித்து அவற்றை புதிதாகப் பதிவு செய்யவும் மத்திய அரசு ஒரு திட்டம் அறிவித்துள்ளது. இதில், 50 வருட பழமையான வாகனங்களைப் பராமரித்து பதிவு செய்யும் திட்டத்தை ஒடிசா மாநிலம் தொடங்கி உள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக இந்தத் திட்டம் ஒடிசாவில் அமலாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment