
உதகை: பனிக்காலத்தில் அறுவடை செய்யப்படும் ‘பிரசில்ஸ் ஸ்பிரவுட்ஸ்’ எனப்படும் கிளைகோஸ்கள், சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாவது வழக்கம் என்றாலும், இந்த ஆண்டு கிளைகோஸ் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில், தேயிலைக்கு அடுத்தபடியாக காய்கறிகள் விவசாயம் பெருமளவில் நடந்து வருகிறது. அதன்படி கேரட், பீட்ரூட் உட்பட ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட காய்கறிகள் விளைச்சல் ஒருபுறம் இருந்தாலும், சைனீஸ் ரக காய்கறிகளை உற்பத்தி செய்வதிலும் விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment