
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 54 புள்ளிகள் (0.09 சதவீதம்) உயர்ந்து 60,712 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 20 புள்ளிகள்(0.11 சதவீதம்) உயர்ந்து 18,050 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கிய போதிலும் வர்த்த நேரத்தில் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது. காலை 10:15 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 61.49 புள்ளிகள் உயர்ந்து 60,718.94 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 2.35 புள்ளிகள் உயர்ந்து 18,045.30 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment