
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் 637 புள்ளிகள் (1.00 சதவீதம்) சரிவடைந்து 60,657 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 189 புள்ளிகள் (1.04 சதவீதம்) சரிந்து 18,042 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் மூன்றாவது நாள் வர்த்தகம் ஏற்றஇறக்கங்களின்றி தொடங்கிய போதிலும், விரைவில் சரிவை நோக்கிச் சென்றது. காலை 09:53 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 248.99 புள்ளிகள் சரிவுடன் 61,045.21 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58.40 புள்ளிகள் சரிவடைந்து 18,174.15 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment