
கோவை: பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள பின்னலாடை துணி ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி சலுகை விகிதத்தை உயர்த்தியுள்ள மத்திய அரசின் நடவடிக்கை பொங்கல் பரிசாக அமைந்துள்ளது என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான மறைமுக வரிகளை நீக்கும் திட்டத்தை (ஆர்ஓடிடிஇபி) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. முன்னதாக அரசு ஆர்ஓஎஸ்சிடிஎல் என்ற சலுகை திட்டத்தை 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment