
மதுரை: மதுரை மாநகராட்சியில் வரி பாக்கி அதிகம் வைத்துள்ள ‘டாப்’ 100 நிறுவனங்களை ‘சீல்’ வைக்க ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுதால், அந்நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து வரியைச் செலுத்தி வருகின்றனர். அதனால், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக ரூ.24 கோடி வரி வசூலாகி உள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, காலிமனைகள் வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி, குத்தகை வரி மற்றும் கடைகள் வாடகை போன்ற பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயைக் கொண்டு தான் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம், சாலை, குடிநீர் பராமரிப்பு மற்றும் விநியோகம், சுகாதாரப் பணிகள், பாதாள சாக்கடை சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment