
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்க இயலாது என தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருமலையில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும்நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில்தேவஸ்தான நிர்வாக அதிகாரிதர்மாரெட்டி கலந்து கொண்டார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்ரீவாரி சேவைக்கான வயது உச்சவரம்பை 60 லிருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 60 வயதுக்குட்பட்டவர்களால்தான் பக்தர்களுக்கு தேவையான சேவையை செய்ய முடிகிறது. மேலும், ஸ்ரீவாரி சேவை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment