
நெருக்கடியான அந்த காலக்கட்டங்களில் தனக்கும், தனது குடும்பத்துக்கும் உதவி செய்த நண்பர்களை நினைத்துப் பார்த்து இன்றைக்கு அவர்களைத் தேடித்தேடி நன்றி கடன் செலுத்தும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) வி. வைத்தியநாதன் செயலை பலர் வியந்து பாராட்டி வருகின்றனர்.
தனது வாழ்க்கையில் சிறியஉதவிகள் செய்த நண்பர்களுக்கும் கூட பல லட்சம் மதிப்பிலான பங்குகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சியடை செய்வதில் வைத்தியநாதனுக்கு அளப்பறிய சந்தோஷம் மட்டுமின்றி மிகப் பெரிய மனநிம்மதி. அந்த வகையில் வைத்தியநாதன் ரூ.5.5 கோடி மதிப்பிலான 7 லட்சம் ஐடிஎஃப்சி வங்கி பங்குகளை 5 தனி நபர்களுக்கு பிரித்து வழங்கி தனது தாராள கொடை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment