
சென்னை: கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நடமாடும் வாகனம் ( புஸ்கார்ட் வாகனம் ) மூலமாக, மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட விற்பனையை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவுபால் உற்பத்தியாளர் இணையம் ( ஆவின் நிர்வாகம் ) ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் வாயிலாக, 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, கோடை காலம் தொடங்கி இருப்பதால், மோர்,லஸ்ஸி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment