
ரோம்: சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு நிறைவு விழா, இத்தாலியின் ரோமில் உள்ள உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், மத்திய வேளாண் துறையின் கூடுதல் செயலாளர் மணீந்தர் கவுர் திவேதி கலந்து கொண்டு சிறுதானியங்கள் தொடர்பான இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்துரைத்தார்.
உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பான எஃப்ஏஒ (FAO), சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு (IYM) -2023-ன் நிறைவு விழாவை இத்தாலியின் ரோமில் உள்ள எஃப்ஏஒ தலைமையகத்தில் நேற்று கொண்டாடியது. நேரிலும் காணொலி முறையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கூடுதல் செயலாளர் மணீந்தர் கவுர் திவேதி உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment