
புதுடெல்லி: உலகளாவிய பில்லியனர்களின் (கோடீஸ்வரர்கள்) விவரங்களை ஆய்வு நிறுவனமான ஹூருன் வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாத நிலவரப்படி, உலக அளவில் ரூ.8,300 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட பில்லியனர்களின் எண்ணிக்கை 3,279 ஆக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 167 பேர் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் 814 பேருடன் முதல் இடத்தில் சீனா உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் (800), 3-வது இடத்தில் இந்தியாவும் (271) உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment