
புதுடெல்லி: குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் ஆலை அமைப்பதற்கான திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் செமிகண்டக்டர் நிறுவனத்தைச் சேர்ந்த தலைவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். நாம் புதிதாக ஒரு வரலாறை உருவாக்கி வருகிறோம். பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஒருவலுவான அடியை எடுத்து வைத்துள்ளோம். ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான 3 செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment