
மைசூரு: நாட்டில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் இடது கையின் ஆள் காட்டி விரலில் எளிதில் அழியாத மை வைக்கப்படும். அதன்மூலம் அவர் வாக்களித்து விட்டார் என்பதை உறுதி செய்து, கள்ள ஓட்டுப் போடுவது போன்ற மோசடிகளை தடுக்க உதவுகிறது. ஒரு வேளை வாக்காளருக்கு இடது கையில் ஆள் காட்டி விரல் இல்லை என்றால், வேறு விரலில் வைக்கப்படும்.
இடது கை விரல்கள் அனைத்தும் இல்லை என்றால், வலது கை ஆள் காட்டி விரலில் மை வைக்கப்படும். வலது கை ஆள்காட்டி விரல் இல்லை என்றால், வேறு விரலில் வைக்கப்படும். ஒரு வேளை வலது கையில் எந்த விரலும்இல்லை என்றால், தோளின் இடது அல்லது வலது பக்கத்தில் சிறப்பு மை வைக்கப்படும் என்று தேர்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment