
புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புக்கு (EFTA) இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்களுக்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "நமது பொருளாதாரங்கள் அனைத்து நாடுகளுக்கும் வெற்றிச் சூழ்நிலைக்கு உறுதியளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிச்சர்லாந்து அடங்கிய ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புடன் இந்தியா ஞாயிற்றுக்கிழமை ஒரு சுந்தந்திர வர்த்தக ஒப்பந்ததில் கையெழுத்திட்டது. டெல்லியில் நடந்த இந்தியா - இஎஃப்டிஏ இடையேயான வர்த்தக ஒப்பந்த கூட்டத்துக்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் துணைத்தலைவராக இருந்தார். இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment