
புதுடெல்லி: மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் பிரிவான வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) இதுகுறித்து வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ளதாவது:
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலம் 64,400டன் வெங்காயத்தை ஏற்றுமதிசெய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிடத்தக்க அளவுவெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்சிஇஎல் மூலம் ஐக்கிய அரபுஅமீரகத்துக்கு காலாண்டுக்கு 3,600 டன் அளவு உச்சரவரம்புடன் 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோன்று வங்கதேசம் உள்ளிட்ட நேச நாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு வெங்காயஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு டிஜிஎஃப்டி தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment