
புதுடெல்லி: மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா திகழ்வதை ஊக்குவிப்பதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா திகழ்வதை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வாகனங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும். புகழ்பெற்ற உலகளாவிய மின்சார வாகன உற்பத்தியாளர்களால் மின்னணு-வாகன உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment