
சென்னை: சென்னையில் தங்கம் விலை 3-வது நாளாக நேற்றும் அதிகரித்தது.பவுனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.48,720 எனும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி பவுன் ரூ.42,280 என விற்பனையானது.அதன்பிறகு, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எதிரொலியாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்கம் விலை, கடந்த டிசம்பர் 4-ம் தேதி பவுன் ரூ.47,800 ஆக உயர்ந்தது.
பின்னர், ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி பவுன் ரூ.48,120 மற்றும் 6-ம் தேதி ரூ.48,320 என அடுத்தடுத்து புதிய உச்சங்களை அடைந்தது. இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment