
புதுடெல்லி: காகிதம் மீதான 5 சதவீத சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய செய்தித் தாள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் ராகேஷ் சர்மா வெளியிட்ட அறிக்கை:
ரஷ்யா-உக்ரைன் போர், மத்திய மேற்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் உலகத்தின்விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக செய்தித்தாள் காகித விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் செய்தித்தாள் காகித சரக்கு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது. செய்தித்தாள் காகிதங்களை விநியோகம் செய்யும் பல்வேறு நிறுவனங்கள் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment