
புதுடெல்லி: மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்ததையடுத்து கடந்த ஆண்டு இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் புதிய பாடப்பிரிவை அறிமுகம் செய்தது. இதன் மூலம் பட்டய கணக்காளர் தேர்வை எழுதக் கூடிய மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
நடப்பாண்டில் பட்டய கணக்கியல் தேர்வை எதிர்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 43 சதவீதத்தினர் மாணவிகள். இத்தேர்வெழுதிய பெண்களில் 48 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் கடந்த 2000-ம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்த இந்தியப் பெண் பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை 2024-ம் ஆண்டில் 30 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதுபற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment